Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னை: காதலன் இறந்த ஒரு வாரத்தில் மாணவி தற்கொலை

ஜுலை 18, 2019 08:26

சென்னை: கொருக்குப்பேட்டை பாரதி நகரை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவருடைய மகள் அர்ச்சனா. அருகில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் அதே பகுதியை சேர்ந்த இளங்கோவுடன் பழகி வந்ததாக தெரிகிறது.

 இதையடுத்து அர்ச்சனாவை அவரது பெற்றோர், கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ. நகரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கவைத்தனர். இந்த நிலையில் கடந்த வாரம் இளங்கோ திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதில் மனவேதனையில் இருந்த அர்ச்சனா இன்று காலை தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். 

இதுகுறித்து ஆர்.கே.நகர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
 

தலைப்புச்செய்திகள்